×

தேனி மக்களவை தொகுதி எம்.பி. ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

சென்னை: தேனி மக்களவை தொகுதி எம்.பி. ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2019-ல் நடந்த மக்களவை தேர்தலில் ஓ.பி.ரவீந்திரநாத் தேனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரி தேனி தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் ஒத்திவைத்தார்.

 

The post தேனி மக்களவை தொகுதி எம்.பி. ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Rabindranath ,Chennai ,Theni ,Demobility ,VOL GP ,Dinakaran ,
× RELATED தேர்தல் முடிவு வெளியாகும் வரை வாக்கு...